புதிர்கள்



          1.      கடலுக்கு நடுவே உள்ளது என்ன?
                     மாணவன் 1:    ட
                     மாணவன்2:    தண்ணீர்????

      2.  முட்டைக்கு நடுவில் இருப்பது என்ன?
                          மாணவன் 1:  ட் ,   
                          மாணவன் 2:  மஞ்சட்கரு

      3.  கிளி ஏன் பச்சையாக இருக்கிறது?
                         நன்றாக அவியாததால்

       4.  மரம்ஏன் பச்சையாக இருக்கிறது?
                        பச்சைத்தண்ணீர் ஊற்றவதால்

       5.  பஸ் ஏன் பஸ்ராண்டில் நிற்கிறது.
             இருக்கத்தெரியாததால்


  • தோகை விரித்து ஆடும் மயில் 4 அடி உயரத்தில் இருந்து முட்டை இடுகிறது. முட்டை உடையுமா? உடையாதா? 
 தோகை விரித்து ஆடுவது ஆண்மயில்.ஆண்மயில் முட்டை இடாது.




  1.         முத்து வீட்டுக்குள்ளே தட்டுப்பலகை. அது என்ன?
          நாக்கு

   2.   ஊசி போல் இருப்பான். ஊரையே எரிப்பான்.           அவன் யார்?

       தீக்குச்சி
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


  • இரண்டு அப்பாக்களும், இரண்டு மகன்களும் மீன் பிடிக்க செல்கின்றனர். ஆளுக்கொரு மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் மூன்று மீன்கள் மட்டுமே உள்ளது. அது எப்படி?
புதிர்விடை 




----------------------------------------------------------------------------------------------------------------------------
 வாய் பேச முடியாத ஒருவர் கடைக்குச் சென்று சிகரெட் வேண்டும் என்றால் எப்படிக் கேட்பார்? ஆள் காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வாயில்வைத்து ஊதுவதுபோலக் கேட்பார். அதேபோல, கண் தெரியாத ஒருவர் சீப்பு வேண்டும் என்றால் எப்படிக் கேட்பார்?
புதிர்விடை 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கண்ணனுடைய அப்பாவுக்கு ஐந்து குழந்தைகள். ஆணழகன், ஈரழகன், ஊரழகன், ஏழழகன். ஐந்தாவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் ? 

புதிர்விடை 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-ஒரு மரத்தில் 13 பறவைகள் அமர்ந்திருந்தன. அப்போது ஒரு வேட்டைக்காரர் அம்மரத்தில் ஒரு பறவையை மட்டும் குறிவைத்துச் சுட்டுவிடுகிறார். சுட்ட பறவை கீழே விழுந்து விடுகிறது. மரத்தில் இருந்த 13 பறவையில் 1 பறவை இறந்த பின் மீதம் எத்தனை பறவைகள் மரத்தில் இருக்கும்?

புதிர்விடை
------------------------------------------------------------------------------------------------------------


ஆறு அணில்கள் நாவல்பழக் கொட்டைகளைப் பொறுக்கி ஒரு பெரிய கூடையில் போட்டன. அணில்கள் மிகமிக வேகமாக வேலை செய்ததால் கூடையில் போட்ட ஒவ்வொரு நிமிட முடிவிலும் அந்தக் கொட்டைகள் இரட்டிப்பாகின. பத்தாவது நிமிட முடிவில் அந்தக் கூடை முழுதும் நிரம்பி விட்டது. அந்தக் கூடையை அரை அளவு மட்டும் நிரப்பும்போது, அந்த அணில்கள் எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
.ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கு ஒன்று எனச் சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. ஆனாலும், கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




































































































No comments:

Post a Comment