பாடல்கள் , கதைகள்

                                                      லட்டும் தட்டும்

வட்டமான தட்டு

தட்டு நிறைய லட்டு


லட்டு மொத்தம் எட்டு
.


எட்டில் பாதி விட்டு,

எடுத்தான் மீதம் கிட்டு
. 


மீதம் உள்ள லட்டு


முழுதும் தங்கை பட்டு


போட்டாள் வாயில் பிட்டு
. 


கிட்டு நான்கு லட்டு,


பட்டு நான்கு லட்டு,


மொத்தம் தீர்ந்த தெட்டு


மீதம் காலித் தட்டு


                                                 ”ப” வரிசைப் பாடல்

பந்து பந்து பந்து
பாலர் ஆடும் பந்து
பிட்டு பிட்டு பிட்டு 
பீங்கான் கோப்பையில் பிட்டு

 புதுமை புதுமை புதுமை
பூக்கள் எல்லாம் புதுமை
பெட்டி பெட்டி பெட்டி
பேரிச்சம்பழப் பெட்டி

பையன்பையன் பையன்
பொம்மை போன்ற பையன்
போட்டி போட்டி போட்டி
பௌர்ணமி தினத்தில் போட்டி!





எங்கே அன்பு????
ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.



மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள் அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.



அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள் அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.



அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.



அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் "அன்பு", அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அழைத்தது அன்பை மட்டு்ம் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உள்ளத்தைத் தொட்ட கதை!

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
...
வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..?Posted Image

நன்றி - தமிழ் பொன்மொழிகள் அகப்பக்கம். 
நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேராசை
முத்துக் கதை

ஒருவன் தவம் செய்து இறைவனிடம் தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற ஓர் ஆள் வேண்டும் என்று கேட்டான்.
அதற்கு இறைவன், ""நீ கேட்ட வரத்தைத் தருகிறேன். ஆனால், நீ அவனுக்குத் தொடர்ந்து ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவன் உன்னை விழுங்கி விடுவான்...'' என்றார்.
அவனும் சரியென்று சம்மதித்தான்.
உடனே இறைவன் அவனுடன் ஒரு பூதத்தை அனுப்பி வைத்தார்.
பேராசை கொண்ட அவன், அந்த பூதத்திடம், ""எனக்கு இந்த நாட்டு அரசன் வசிப்பதை விடப் பெரிய அரண்மனை ஒன்று வேண்டும்'' என்றான்.
கண் மூடிக் கண் திறப்பதற்குள் அழகிய அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது பூதம்.
அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
மேலும், மேலும் அவன் ஆசைப்பட்டவற்றையெல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றிவிட்டு, ""வேலை கொடு... வேலை கொடு... இல்லையென்றால் உன்னை விழுங்கி விடுவேன்'' என்று பூதம் அவனை மிரட்ட ஆரம்பித்தது.
பூதத்துக்கு வேலை கொடுப்பதே அவனுக்கு வேலையாகி விட்டது. அவனால் முடியாமல் போய் மிகவும் சோர்வடைந்து போனான். பூதம் அவனை விரட்ட ஆரம்பித்தது.
மீண்டும் இறைவனிடம் ஓடினான்... ""என்னைக் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...'' என்று கதறினான்.
மனமிறங்கிய இறைவன், அவனை விரட்டி வந்த பூதத்திடம், ""நான் சொல்லும் வரை இந்தப் படிகளில் ஏறி ஏறி இறங்கிக் கொண்டு இரு...'' என்று கட்டளையிட்டார்.
பூதமும் இறைவன் சொன்னபடி, படிகளில் விடாமல் ஏறி, இறங்கிக் கொண்டேயிருந்தது.
பேராசைக்காரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணியபடி, இறைவனை வணங்கிவிட்டுச் சென்றான்.
(அந்தப் பூதம் வேறு யாருமில்லை... நமது மனம்தான்... நமது மனம் நமக்குத் தேவையானவற்றை அடைய வழியைக் காட்டும். பேராசைப்பட்டால் நம்மையே அழித்து விடும்.)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
A Child went to a shop with his mother.
The shop keeper looked at the small cute child and showed him a bottle with sweets and said 'Dear Child.. You can take the sweets...

But the child didn't take.

The shop keeper was surprised.. such a child he is and why is he not taking the sweets from the bottle. Again he said take the sweets...

Now the mother also heard that and said.. take the sweets dear.. Yet he didn't take...

The shopkeeper seeing the child not taking the sweets... he himself took the sweets and gave to the child. The child was happy to get two hands full of sweets.

While returning home the Mother asked the child...

Why didn't you take the sweets, when the shop keeper told you to take?...

Can you guess the response:

Child replies... Mom! my hands are very small and if i take the sweets i can only take few.. but now you see when uncle gave with his big hands.... how many more sweets i got!
When we take we may get little but when God gives... HE gives us more beyond our expectations. ..more than what we can hold..!! Stay Blessed..

Share If You Agree


பொறுப்பு ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.

குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.

யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது.

ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள்.

மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆறுமாதம் சென்றது.

குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.

""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள்.

""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.

""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள்.

""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள்.

ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.

""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன்.

நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள்.

பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.

அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.


அம்மா என்பதில் உள்ளிளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக ”அ”  என்னும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் ”ம்” என்னும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும், 10 மாதம் கழித்து  உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதற்கு ” மா” என்னும் உயிர் மெய் எழுத்தையும் வைத்துள்ளனர்.
அதே போன்று தான் அப்பா என்ற சொல்லும் அமைந்துள்ளது. தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் ”ம்” என்ற மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வன்மையானவர் என்பதால்தான் ”ப்” என்ற வல்லினஎழுத்து பயன்படுத்தப்ப்டுள்ளது.
எனவே தமிழ்மொழி என்பது பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை புரிந்து கொள்ளமுடியும்


முயலும் வெற்றி பெறும்.
ஆமையும் வெற்றி பெறும்.
முயலாமை வெற்றி பெறாது.


அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள்மேய்ந்துகொண்டிருந்தனஅவற்றை மேய்த்துக்கொண்டுவந்தவன்மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடிபுல்லாங்குழல்வாசித்துக்கொண்டிருந்தான்புல்வெளியைச் சுற்றி வேலிபோடப்பட்டிருற்ததுஅதன் அருகேஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்துகொண்டிருந்ததுவேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்றுஆட்டுக் குட்டியைப் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டுஓநாய்எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்ததுஅதைப் பார்த்தஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது.ஓநாயும் "நண்பாநண்பா...இங்கே இளசான புல் கிடைக்குமாஎன்று பார்க்கிறேன்இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப்பிரியம்அதைத் தின்றுஜில்லென்று தண்ணீர் குடித்தால்எவ்வளவு நன்றாக இருக்கும்உங்களுக்கெல்லாம் அந்தயோகம் கிடைத்திருக்கிறதுஎனக்கு அது கிடைக்கவில்லை....."என்று வருத்தத்துடன் கூறியது.
"அப்படியாநீ புல்லா சாப்பிடுவாய்நீ மாமிசத்தைத்தான்சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும்சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. "சேச்சே...அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய்.
"அப்படியென்றால் இருநான் வெளியே வந்துமலையின்அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன்நாம்இரண்டு பேரும் போய்அதைச் சாப்பிட்டுவிட்டு,ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டுஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்துஓநாயின்பக்கம் போயிற்று."உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது.
அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லைஅதுபோகட்டும்பரவாயில்லை...அனுபவம் நிறைந்த அம்மாஅப்பாபேச்சை கேட்டிருந்தால்மதிப்பு வாய்ந்ததன் உயிரைஇழந்திருக்காது அல்லவா?

குருவி கூடு கட்டுது!
கூடு கட்ட யாரிடம்
குருவி கற்றுக் கொண்டது?
கூறு தம்பி தங்கையே!

எறும்பு உணவைச் சேர்க்குது
எங்கும் ஓடி உழைக்குது!
சுறுசுறுப்பாய் உழைத்திட
சொல்லு எங்கே கற்றது?

கொக்கு கரையில் நிற்குது
குறியாய் மீனைக் கொத்துது!
கொக்கு கல்வி கற்றதா?
குறியாய் மீனைக் கொத்தவே.

மலரும் பூத்துச் சிரிக்குது
மதுவைச் சுரந்து கொடுக்குது!
மலரும் பாடம் படித்ததா?
மதுவைச் சுரந்து கொடுக்கவே.

தேனீ தேனைத் தேடுது
தேடிச் சேர்த்து வைக்குது!
தேனீ கற்றதெவ்விடம்?
தேனைத் தேடும் ஆற்றலை.

காக்கை ஒன்றாய் வாழுது
கரைந்தே கூடி உண்ணுது!
காக்கை பள்ளி போனதா?
கரைந்து கூடி உண்ணவே.

திறமை இருக்கு உம்மிடம்
தேடு அந்தப் புதையலை
திறமை காட்டு உலகினில்
தேடும் உலகம் உம்மையே!


ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று! பாடல் வரிகள்
ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து ஒருகை விரல் ஐந்து
ஆறு ஈக்குக் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து
ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று! பாடல் காட்சி



-----

No comments:

Post a Comment